வரிப்பணம்!

ஆட்டோக்காரர் செழுத்தும் வரிப்பணம்!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நமது மத்திய மாநில அரசுகள் தங்களின் திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கும் வரி எப்படி இந்த அரசுகளுக்குச் சென்றடைகின்றன என்ற விபரம் கூடத் தெரியாதவர்களாகவே விளங்;கி வருகிறோம்! இதனை முறையாக அறிந்து கொள்ளும் ஆற்றலுக்கு பெரிய அளவிலான கல்வி அறிவு கூட மக்களுக்கு தேவையில்லை!

இந்த அரசுகளுக்கு வரி வருவாய் எப்படி வந்தால் எங்களுக்கென்ன? அதனைத் தெரிந்து கொண்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்ற பதில் நம்மிருந்து வருகின்றது என்றால் நாம் நமது தற்போதைய துயர வாழ்க்கையைக் களைவதற்கும்  நமது சந்ததியின் எதிர்காலத்தை உயர்த்துவதற்கும் முன் வராதவர் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்!

சரி அதைப் பற்றி நாங்கள் தெரிந்து கொண்டால் நமக்கு என்ன பயன் என்று நாம் கேட்க ஆரம்பித்தாலே நமக்குள் வரிப்பணம் பற்றிய விழிப்புணர்வு தோன்றி விட்டது  நமது தேர்தல் நேரத்து வாக்கு வங்கி வீணாவது தடுக்கப்படுகிறது என்றுதான் அர்த்தம்! இதன் விழைவால் ஊழல் அரசியல்வாதிகள் நம் தமிழகத்தில் உருவாவது தடுக்கப்பட்டு ஒரு ஊழலற்ற புதிய அமைப்பு உருவாவதற்கு நாம் உதவப் போகிறோம் என்பது நிச்சயம்!

தேர்தல் காலங்களில் பல்வேறு கட்சிகளுக்காக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்ய பயன்படும் ஆட்டோக்களை ஓட்டுகின்ற ஆட்டோ டிரைவர்கள் மத்திய மாநில அரசுகள் தங்களிடமிருந்து பெறப்படும் வரிப்பணத்தை வீணடிப்பதை இனியாவது தடுக்க உங்களின்  சிந்தனைக்கு சில வரிகள்!

நான் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனர் நான் சராசரியாக ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோலுக்கு செலவிட்டு எனது ஆட்டோவை ஓட்டுகிறேன்! ஆட்டோ உரிமையாளருக்குச் சேர வேண்டிய தொகை போக இதில் எனக்கு சராசரியாக தினசரி நூறு ரூபாய்தான் வருமானம் வருகிறது! இதைக் கொண்டுதான் எனது வாழ்க்கை வண்டி ஓடுகிறது! நான் அரசுக்கு வரும் வரிப்பணம் பற்றித் தெரிந்து கொண்டு எனக்கு என்ன பயன்?

உங்களுக்கான பதில் இதோ!

உங்களின் தினசரி பெட்ரோல் செலவு இருநூறு ரூபாயில் மத்திய அரசு இறக்குமதி வரி உற்பத்தி வரி மற்றும் மத்திய விற்பனை வரி எனச் சுமார் அறுபது ரூபாய்களையும் தமிழக அரசு மாநில விற்பனை வரி எனச் சுமார் அறுபது ரூபாய்களையும் பெற்றுவிடுகின்றன! 

அது மட்டுமல்ல இந்த பெட்ரோலுக்குரிய மூலப்பொருள் அது உற்பத்தியாகும் வளைகுடா நாடுகளிலிருந்து கப்பல் வாயிலாக பாரதம் வந்தடைந்து எண்ணெய் நிறுவனங்களில் பின்னர் பெட்ரோலாக பிரிக்கப்பட்டு போக்குவரத்து மூலம் உங்களை வந்தடையும் பெட்ரோல் பங்க் வரையில் பல வழிகளில் இந்த அரசுகள் வரி ஆதாயம் பெறுகின்றன! இதன் மூலம் இந்த அரசுகளுக்கு நீங்கள் மறைமுகமாக செழுத்தும் வரித்தொகை ஒரு ஆண்டிற்கு சுமார் இருபதாயிரத்தைத் தொடும்!

அது மட்டுமல்ல உங்கள் உரிமையாளர் தனது ஆட்டோவைப் பராமரிக்க நீங்கள் தரும் வாடகைப் பணத்திலிருந்து ஆட்டோ உரிமக் கட்டணம் இன்சூரன்ஸ் கட்டணம் சாலை வரி ஆட்;டோவைப் பழுது பார்க்கத் தேவைப்படும் உதிரிபாகச் செலவு மற்றும் ஒர்க்சாப் செலவு எனப் பல வழிகளில் தனக்குக் கிடைத்த வருமானத்தில் செலவிடுகிறார்!

இதுவும் கூடக் கிட்டத்தட்ட பெட்ரோலுக்கு நீங்கள் செழுத்திய வரிப்பணத்திற்கு இணையாக வரும்! உதிரிபாகங்கள் வாங்கும்போது அவர் அவற்றிற்கும் வரி கட்டுகிறார்! ஒர்க்சாப் செலவுகளிலும் அவர் வரி கட்டுகிறார்! இவற்றிற்கு மிஞ்சிய தொகையில் தனக்குக் கிடைக்கும் வருமானத்திலும் அவர் உங்களைப் போலவே அரசுகள் நடக்க வரி செழுத்துகிறார்!

இப்பொழுது நீங்கள் ஆட்டோ டிரைவர் நிலையிலிருந்து சாதாரண மக்களில் ஒருவர் அல்லது உங்கள் வாகனத்தில் பயணம் செய்யும் சாதாரண நடுத்தர மக்களில் ஒருவர் என வைத்துக் கொள்ளுங்கள்!

இப்பொழுது உங்கள் மாத வருமானம் மூவாயிரம் ரூபாய்கள் என ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள்! இந்த வருமானத்தை நீங்கள் சேமிக்கவே முடியாமல் அப்படியேதான் செலவிட்டு வருகிறீர்கள் என்பது நீங்கள் சொந்த வண்டி வாங்க இயலாத நிலையிலும் தற்பொழுதுகூட வங்கியிலோ அல்லது தனியார் நிதிநிறுவனத்திலோ கடன்பட்ட நிலையில் கடனாளியாகத்தான்; உள்ளீர்கள் என்பது நீங்கள் சொல்லாமலே எனக்கு விளங்கும்! 

ஆக இந்த மூவாயிரம் ரூபாய்களையும் அப்படியே நீங்கள் உங்கள் குடும்பத்திற்கென செலவிடுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்! இந்த வருமானத்திலும் மத்திய மாநில அரசுகள் செயல்படச் சராசரியாக ஆண்டொன்றிற்கு சுமார் பனிரெண்டாயிரம்; ரூபாய்கள் வரியாகச் செழுத்துகிறீர்கள்! 

நீங்கள் உங்கள் தினசரி உபயோகத்திற்கெனப் பயன்படுத்தும் சோப்பு சீப்பு பவுடர் அழகு சாதனப்பொருட்கள் கொசுவிரட்டி எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் மதிப்பில் குறைந்த அளவாக வைத்துக் கொண்டால் கூடச் சுமார் நாற்பது சதவீதம் வரை இந்த அரசுகள் வரியாகப் பெற்று விடுகின்றன! அது தவிர உங்கள் குடும்பம் பேருந்தில் பயணம் செய்தாலோ ஒரு திரைப்படம் பார்த்தாலோ தொலைக் காட்சி ஒலி;பரப்பினை கேபிள் டிவி மூலம் பார்த்தாலும் கூட எங்கும் எதிலும் வரிதான்! 

உங்களின் உடையிலிருந்து உணவிலிருந்து குழந்தைகளின் படிப்பிலிருந்து மருத்துவம் வரை எந்தச் செயலை உங்களின் மாத வருமானம் மூவாயிரத்தில் செலவிட்டாலும் வரி செழுத்தாமல் அது செலவிடப்படவில்லை! இந்த வரியை மனதில் கொண்டு ஒரு தொகையைக் கடனாகத் தந்து ஒரு ஆட்டோவை வாங்குவதற்கு இந்த அரசுகள் முன்வந்திருந்தாலே நீங்கள் ஒரு சொந்த வாகனத்திற்கு உரிமையாளராக மாறி இருக்க முடியும்!

இப்பொழுது உங்கள் சட்டைக் காலரைச் சற்று உயர்த்தி விட்டுக்கொண்டு உங்களிடம் வாக்கு கேட்க வரும் அரசியல்வாதிகளை நிமிர்ந்து அழுத்தமாக கேளுங்கள்! இவ்வளவு வரி கட்டும் எங்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று! 

இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு நீங்கள் தயாராகி விட்டாலே இனி உங்கள் ஆட்டோக்கள் ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கேட்டு குண்டும் குழியுமான நரகச் சாலைகளில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு இனி எக்காலத்திலும் ஓடப் போவதில்லை என சர்வ நிச்சயமாக உறுதிபடக் கூற முடியும்!

மேலும் நீங்கள் இந்தக் கருத்தினை ஏற்றுக் கொண்டால் இதை உங்களின் பார்வையிலும் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வையிலும் படிக்கும்படி ஒட்டி வைத்து வாக்காளர் விழிப்புணர்வு பெற இனியாவது உதவுங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!