இடுகைகள்

ஆகஸ்ட், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழகத்தில் மது ஆலைகளையும் மதுக்கடைகளையும் மூட வேண்டிய அவசியமே இல்லை!!!

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கினை அமல்படுத்த அரசினை வலியுறுத்திப் போராடி வந்த திரு சசிபெருமாள் அவர்கள், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் செல்பேசி மின் கோபுரததில் ஏறிப் போராடத் துவங்கியிருக்கிறார். அவரது கோரிக்கையை அரசு அலுவலர்கள் உடனடியாகச் செவி சாய்க்காமல் காலம் தாழ்த்திய பின்னர் அவர் வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கப்படும் நிலை உருவாகி  அதன் காரணமாக அவர் உடல்நிலை மோசமடைந்து மரணமேற்படக் காரணமானதென ஊடகங்கள் வாயிலாக அறிய நேரிட்டது கண்டு ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக எமது ஆழ்ந்த வருத்தங்களைப் பதிவு செய்கிறோம். காந்தியவாதியாகத் தம் வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்ட திரு சசிபெருமாள் அவர்கள் இது போன்ற மாற்று வழிப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததுதாம் அவரது மரணத்திற்கென எழுதப்பட்ட விதியோ என்னவோ  சட்டவிதிகள் இது போன்ற போராட்டங்களைத் தற்கொலை முயற்சியாகத்தாம் பதிவு செய்யும் என்பதை ஏனோ அவர் மனதில் கொள்ளத் தவறித் தன் இன்னுயிரையும் ஈந்து விட்டார். காந்தியவாதிகளுக்கு அடக்குமுறையாளர்களால் ஏற்படும் கதியினை நாம் சுதந்திரத்திற்கு முன்னரே வெள்ளையர் ஏகாதிபத்தியத்தில் ஏராளம் கண்டுள்ளோம். 

எந்தையே! எம் தந்தையே! கலாமே!

எந்தையே! எம் தந்தையே! கலாமே! கண்டம் விட்டுக் கண்டம் பறக்குமாம் வேடந்தாங்கல் பறவைகள்!  இராணுவ வரிசையென முன்பின் அணி அணியாய்ப் பறக்கும் பயணம்! முன்வரிசைப் பறவைகளின் சிறகசைவில்  ஓய்வெடுத்துப் பறந்து செல்லும் பின் வரிசை அணியும் தம் களைப்பு நீங்கி முன் வரிசை வந்து பறக்க  முன் வரிசை அணி பின் வந்துதம் களைப்பு நீங்கும் சுழற்சிமுறை!  எங்கும் தங்கவியலா இடைநில்லா நெடுங்கடல் பயணம்தனை  முடிப்பதன் இரகசியம்தாம் மாந்தர்க்கு வியப்புமிகு செய்தி போன்றே கண்டம் விட்டுக் கண்டம் பாயும் இடைநில்லாப் பயணம் செய்யும்  நெருப்பு ஏவுகணை தந்த எம் தந்தையே! கலாமே! எம்மை முன்வரிசைக்கனுப்பிவிட்டுச் சற்று ஓய்வெடுக்க நினையாது  உடல் மூப்பும் கருதாமல்  ஓயாதுழைத்திட்ட காரணத்தால்  அந்தோ மரணப் பெருங்கடலில் வீழ்ந்த உம்மைக் காணாது தவித்து எம் இமைநீர் கடல்போல் பெருக எங்கும் தேடிக் களைத்திட்டோம்! வெந்தழலில் வீழ்ந்தாலும் உயிர்த்தெழும் ஃபீனிக்சு பறவைபோல்  இராமேசுவரப் பேய்க்கரும்பிலிருந்து மீண்டும் புது உடலெடுத்து வாருங்கள்! எம்மைத் தூங்காது துரத்தும் இலட்சியக் கனவுகள் சுமந்து நாங்