இங்கு யாரும் தோற்கவில்லை!
இளைஞன் ஒருவன் ஒரு ஸென் மதகுருவிடம் வந்து நான் எல்லாவித தீமைகளையும் செய்து விட்டேன். அதனால் தனக்கு வாழ்வே வெறுத்துவிட்டது. ஞானம் பெற இனி நான் என்ன செய்ய வேண்டும் என வினவினான். அந்த குரு உனக்கு வாழ்க்கையில் இன்னும் விடவே முடியாதது எதுவென்று கேட்டார். அதற்கு அவன் எனக்கு சதுரங்க விளையாட்டில்தான் தீவிர ஆர்வம் அதை மட்டுமே என்னால் இப்பொழுதும் விடமுடியாது என்றான். அப்படியானால் ஒரு உன்னுடன் சதுரங்கம் விளையாட இங்குள்ள எனது சீடர் ஒருவரை அழைக்கிறேன். நீ அவருடன் விளையாட வேண்டும். இந்த விளையாட்டில் நீ வென்றுவிட்டால் அவரது தலையை நான் வெட்டிவிடுவேன். அதே சமயம் அவர் வென்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டிவிடுவேன். இதுதான் விதி சம்மதமா என்றார். அந்த இளைஞனோ ஒரு போர்க்குணம் மிக்க சமுராயின் மகன். எனவே தனக்குள் இயல்பாக உள்ள போர்க்குணத்துடன் இந்த விளையாட்டிற்கு ஒப்புக் கொண்டான். அவனை எதிர்த்து விளையாட வந்த சீடரோ இந்தக் குருவிடம் சீடராகிப் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் பழகியவர். ஒளி பொருந்திய முகத்துடன் குருவின் நிபந்தனைக்கு மறுப்பேதும் சொல்லாமல் விளையாட ஒப்புக்கொண்டார். விளையாட்டு துவ