இடுகைகள்

பிப்ரவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இங்கு யாரும் தோற்கவில்லை!

இளைஞன் ஒருவன் ஒரு ஸென் மதகுருவிடம் வந்து நான் எல்லாவித தீமைகளையும் செய்து விட்டேன். அதனால் தனக்கு வாழ்வே வெறுத்துவிட்டது. ஞானம் பெற இனி நான் என்ன செய்ய வேண்டும் என வினவினான். அந்த குரு உனக்கு வாழ்க்கையில் இன்னும் விடவே முடியாதது எதுவென்று கேட்டார்.  அதற்கு அவன் எனக்கு சதுரங்க விளையாட்டில்தான் தீவிர ஆர்வம் அதை மட்டுமே என்னால் இப்பொழுதும் விடமுடியாது என்றான். அப்படியானால் ஒரு உன்னுடன் சதுரங்கம் விளையாட இங்குள்ள எனது சீடர் ஒருவரை அழைக்கிறேன். நீ அவருடன் விளையாட வேண்டும். இந்த விளையாட்டில் நீ வென்றுவிட்டால் அவரது தலையை நான் வெட்டிவிடுவேன். அதே சமயம் அவர் வென்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டிவிடுவேன். இதுதான் விதி சம்மதமா என்றார். அந்த இளைஞனோ ஒரு போர்க்குணம் மிக்க சமுராயின் மகன். எனவே தனக்குள் இயல்பாக உள்ள போர்க்குணத்துடன் இந்த விளையாட்டிற்கு ஒப்புக் கொண்டான். அவனை எதிர்த்து விளையாட வந்த சீடரோ இந்தக் குருவிடம் சீடராகிப் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் பழகியவர். ஒளி பொருந்திய முகத்துடன் குருவின் நிபந்தனைக்கு மறுப்பேதும் சொல்லாமல் விளையாட ஒப்புக்கொண்டார். விளையாட்டு துவ

இன்றைய இளைஞர்கள் கட்டாயம் தட்டச்சு பழக வேண்டும்

வணிக உபயோகத்திற்கென முதன் முதலாக நான் 2003 ஆம் ஆண்டில் கணினி வாங்கியபோது எனக்கு அதனை எப்படி இயக்குவது என்பதுகூடத் தெரியாது. எனக்கு அப்பொழுது வயது 41. எனது 43 வயதில் வணிக வாழ்வில் நான் நட்டமுற்றதன் விளைவாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த வயதில் ஒரு கணக்காளராக வேலை செய்யக்கூடிய அளவில்தான் நான் இருந்தேன். பல ஆண்டுகள் வணிகத்தில் இருந்ததால் வரவு செலவு கணக்குகளை எழுதுவதில் ஓரளவிற்கு எனக்குப் பயிற்சி இருந்தது. கணினியில் டேலி பற்றிய அறிவும் ஓரளவு இருந்தது. எனவே நான் டேலியில் எனது கவனத்தை செழுத்தி அதில் ஓரளவு பயிற்சி பெற்றேன். அதை விட முக்கியமாக நான் கணினியின் கீ போர்டில் தட்டச்சு செய்வதை முறைப்படி கற்றுச் செய்ய வேண்டும் என விரும்பினேன். தட்டச்சு நிலையம் சென்று பயிலும் அளவிற்கு அப்பொழுது எனது நிதிநிலை கை கொடுக்காததால் நான் ஒரு தட்டச்சு பயிற்சி புத்தகத்தை எனக்கு மகள் முறையுடைய ஒருவரிடமிருந்து பெற்று அதில் வழி காட்டியபடி நானாகவே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து பழகத் துவங்கினேன். கிட்டத்தட்ட ஒரு மாதம் கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். அதனால் ஆங்கி

அன்னைத் தமிழால் என்னைச் செதுக்கியவர்கள்

உயர்நிலைப்பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கத் துவங்கியபோது எனது உறவினரும் தமிழாசிரியருமான சித்தையா அவர்கள் எனது வகுப்பாசிரியராக இருந்தார். பத்து வயதில் முதன் முதலாக விபரம் புரிந்து அவரிடம் தமிழ் கற்க நேர்ந்தது. அதன் பின்னர் ஏழாம் வகுப்பு துவங்கி பள்ளி இறுதி வரை அடுத்தடுத்த வகுப்புகளில் தமிழாசிரியர்களாகச் சிலர் இருந்தாலும் பெரும்பாலும் எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ஆபெ என பள்ளி வளாகம் முழுவதும் ஆசிரியப் பெருமக்களால் அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய திரு ஆ.பெரியசாமி அவர்கள். தமிழில் நான் இன்று இலக்கண சுத்தமாக எழுதுகிறேனா என்பது எனக்கே தெரியாது. மேலும் எல்லோரைப் போலவும் இப்பொழுதும் எனது எழுத்துக்களில் அவ்வப்போது எழுத்துப் பிழை என்னை அறியாமலேயே வெளிப்பட்டுவிடுகிறது. இதற்கு நான் எனது படைப்பை மீண்டும் படித்துத் திருத்தாமல் அவசரமாக வெளியிட்டுவிடுவதுதாம். எனினும் என்னை தமிழில் எழுதுவதற்கு ஒரு உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திரு ஆபெ என்பதில் இன்றளவும் எனக்குள் சந்தேகம் இல்லை. திரு ஆபெ அவர்கள் மிகுந்த பகுத்தறிவுச் சிந்தனைகள் நிறைந்தவர் தந்தை பெரியாரின் வழியில் நடந்தவர். சேலம் ம

கண்ணாடிச் சட்டம் போட்டுக் கதறித் துடிக்கவா படித்துப் பட்டம் வாங்க கல்விக்கூடம் அனுப்பினோம்?

சமீபகாலமாக ஊடகங்களில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி பயின்ற இளம் பெண்களின் தற்கொலைச் செய்திகள் வரத்துவங்கி இருப்பது தமிழகம் எங்கே போகிறது என்ற கேள்வியை எழுப்பத் துவங்கியுள்ளது. தற்கொலை செய்துகொண்ட பெண்களின் செய்தியைக் காணும்போதெல்லாம் தங்கள் உறவில் ஒருவரை இழந்துவிட்டது போன்ற வேதனை அலைகள் ஒவ்வொரு நல்ல உள்ளத்திலும் எழாதிருக்காது.  பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தரமிக்க கல்வி கிடைக்கும் இடங்கள் எங்கிருந்தாலும் கடன்பட்டாவது தங்களின் பிள்ளைகளை விடுதியில் தங்கிப் படிக்க வைத்துவிட்டுக் குறிப்பாகப் பெண் குழந்தைகளை அனுப்பிவைக்கும் பெற்றோர்களின் தூக்கமில்லா இரவுகளை ஒரு கட்டத்தில் எங்கள் ஒரே மகளை சென்னையில் கிடைத்த வேலைக்காக விடுதியில் தங்கி வேலை செய்ய சில மாதங்கள் அனுப்பி  நாங்களே அனுபவித்துள்ளோம். படிக்காத மேதையின் ஆட்சிக்காலத்தில் கல்விக்கூடங்களில் ஆரம்பக் கல்வியும், உயர் கல்வியும்  பெற தமிழகமெங்கும் பட்டிதொட்டியெங்கும் ஏராளமாகக் கல்விக்கூடங்கள் திறந்திருந்தார்.  அந்த மேதைக்கு நீண்ட ஆயுளை இயற்கை வழங்கியிருந்தால் ஒவ்வொரு வட்டத்திலும் இன்று தரமான பல்கலைக் கல்விக்கூடங்களை ஏராளம்