பெருமைப்படுவதா? வெட்கப்படுவதா?

தனது மகன் தேரோட்டிச் சென்றபோது அடிபட்டு இறந்த கன்றுக்காக மணியடித்து அறம் கேட்ட பசுவின் கண்ணீருக்குத் தனது மகனையே தேரிலிட்டுக் கொன்று அறம் நிலை நாட்டிய சோழனின் ஆட்சியின்போது

இளவரசன் மேல் பரிதாபப்பட்டு அரசனது குடும்பமோ அமைச்சர் பெருமக்களோ ஏன் நாட்டு மக்கள்கூட எவரும் அரசனிடம் பரிந்து பேசியதாக வரலாற்றில் எந்தப் பதிவுமில்லை.

கண்ணகியின் வழக்கின்போது ஆராயாமல் தீர்ப்பளித்த குற்றத்திற்காகத் தன் வெண்கொற்றக்கொடி தாழ்ந்து உயிர் நீப்பதற்கு முன்பு

அரசனையே எதிர்த்துத் திமிராகப் பேசிய கண்ணகியை அரசரை அவமதித்த குற்றத்துக்காகச் சிறை தண்டனை கொடுங்கள் எனவோ

கண்ணகி தங்கள் எதிரி நாடாகிய சோழ நாட்டைச் சேர்ந்தவள் எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிடுங்கள் எனவோ,

அமைச்சர் பெருமக்கள் எவரும் மன்னருக்கு வக்காலத்து வாங்கியதாக வரலாற்றில் எந்தப் பதிவுமில்லை.

அரசனுக்கும் அரச குமாரனுக்கும் என நாட்டிலுள்ள அனைவருக்கும்  அறம் பொதுவானதுதாம் என எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாது

அறம் நிலை நாட்டிய ஒரு மகத்தான நாட்டில் பிறந்தோமெனப் பெருமைப்படுவதா?

பணம் இல்லாதவன் குற்றம் செய்தால் உடனடியாக விசாரித்து தண்டனை அளித்து சிறையிலிடுவதும்,

மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையிட்டுக் கொழுத்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அலுவலர்களின் வழக்குகள் மட்டும் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு

ஒரு கட்டத்தில் இவர்கள் நிரபராதிகள் என விடுதலை செய்யப்படும் ஆங்கிலேய பாணி ஓட்டைச் சட்டங்கள் நிறைந்த

இந்த நாட்டில் பிறந்ததற்காக வெட்கப்படுவதா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!