இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே!

எனது மகளின் திருமணம் இனிதாக முடிந்த அந்த நன்னாளில் சேலத்திலிருந்து ஈரோட்டிற்கு இல்லம் திரும்பிக் கொண்டிருந்தோம். வழியில் காணப்பட்ட வங்கி ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பது கண்டு சற்று வியந்தவாரே எங்கள் பயணம் தொடர்ந்தது. சங்ககிரியைக் கடப்பதற்கு முன்பு எங்களின் செல்பேசிகளில் இன்றுவரை நாட்டையே அலங்கோலமாக்கிவிட்ட ஒட்டுமொத்த தமிழக மக்கள் மட்டுமல்ல, வந்தாரை வாழ வைக்கும் நம் தாய்நாடாம் தமிழகத்தில் பிழைப்புத் தேடி வந்துள்ள கோடிக்கணக்கான வட இந்தியர்கள் வரை, இந்திய வரலாற்றிலேயே இன்றுவரை திட்டித் தீர்க்கப்படும் ஒரே பெருமைக்குரிய நம் பாரதப் பிரதமர் அவர்கள் சர்வாதியாக அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் அந்தத் துயரகரமான செய்தி. அன்று துவங்கியதுதாம். ஒரே நாளில் மக்கள் அனைவரும் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டனர். கையில் வைத்திருந்த சொற்பமான சில ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் திருப்பிக் கொடுக்க ரேசன் கடைகளில் காத்திருப்பதை விடக் கேவலமாக கடும் வெயிலிலும், தன் அன்றாட வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு நடுத்தெருவில் கால்கடுக்க நின்றனர் நாட்டு மக்கள்.  ஒரே சேமிப்பான மண்பாண்ட உண்டி

ஐவர் மலை இரசியம்!!!

படம்