வள்ளலார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என மனம் கசிந்துருகி கொல்லாமையை வலியுறுத்தி உயிர்களையும் பயிர்களையும் நேசிக்கக் கற்றுத்தந்து சாதி பேதம் மறுத்து சமரச சன்மார்க்க சங்கம் அமைத்து பிரபஞ்சத்தில் நிலை பெற்று வாழும் தவச்சித்தர் வள்ளலார் அவர்களின் பிறந்த தினம் இன்று. பக்தி மார்க்கத்தில் இருந்தபோது வள்ளலாரைப் புரிந்து கொள்ள இயலாது போனாலும் சித்த மார்க்கத்தில் அறிவு தெளிந்து அசைவ உணவு தவிர்த்து ஓரளவேனும் அவர் வழியில் வாழ முற்பட்டாலும் நம் தமிழக மக்கள் அனைவரும் வள்ளலார் அவர்களின் கருணை குணம் நினைந்து வாழ வேண்டும் என விரும்பி வள்ளலார் வகுத்த சமரச சன்மார்க்க தத்துவம் உலகெங்கும் தழைக்க வேண்டும் என்ற விருப்பங்களுடன் அவர்தம் நினைவினை ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாகப் போற்றுகிறோம்.