தமிழர் தந்தை பெரியார் மற்றும் எம்ஜியார் நினைவு தினம் இன்று!
தமிழர்களின் பெயர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்த சாதி எனும் வாலை ஒட்ட நறுக்கி எறிந்த தமிழர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று.
தமிழகத்தை இன்றும் ஆட்டிப் படைக்கும் சாதிய மதவாத சக்திகளுக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்று திரள வேண்டிய கால கட்டம் இது.
தமிழினம் ஒன்றுபட்ட காட்சியினை கடந்த வெள்ளச் சேத நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக நிரூபித்துள்ளன.
இதே நாளில் மறைந்த அமரர் எம்ஜியார் அவர்களின் கனவுப் பாடல்கள் நனவாவது இன்றைய திராவிட இயக்கங்களால் நிறைவேறவே இயலாத காரியம்.
அவர்தம் கனவுகளும் நனவாக திராவிட இயக்கங்களை விரும்பாத மக்கள் ஒன்றுபட வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.
தமிழினம் உள்ளவரை தந்தை பெரியார் அவர்களின் எழுத்துக்களும் எழுச்சி உரைகளும் தமிழர்தம் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கைகளுடன்
மாற்று இயக்கமானாலும் தந்தை பெரியாரால் மதிக்கப்பட்ட கர்மவீரர் போன்ற ஒரு எளிமையான நல்லவரின் தலைமை தமிழகத்திற்கு இன்று மிக மிக அவசியம் என்ற எதிர்பார்ப்புடன் அந்த நல்லவருக்காகக் காத்திருக்கிறோம்.
வாழ்க தந்தை பெரியார் மற்றும் அமரர் எம்ஜியார் புகழ்!
தமிழகத்தை இன்றும் ஆட்டிப் படைக்கும் சாதிய மதவாத சக்திகளுக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்று திரள வேண்டிய கால கட்டம் இது.
தமிழினம் ஒன்றுபட்ட காட்சியினை கடந்த வெள்ளச் சேத நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக நிரூபித்துள்ளன.
இதே நாளில் மறைந்த அமரர் எம்ஜியார் அவர்களின் கனவுப் பாடல்கள் நனவாவது இன்றைய திராவிட இயக்கங்களால் நிறைவேறவே இயலாத காரியம்.
அவர்தம் கனவுகளும் நனவாக திராவிட இயக்கங்களை விரும்பாத மக்கள் ஒன்றுபட வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.
தமிழினம் உள்ளவரை தந்தை பெரியார் அவர்களின் எழுத்துக்களும் எழுச்சி உரைகளும் தமிழர்தம் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கைகளுடன்
மாற்று இயக்கமானாலும் தந்தை பெரியாரால் மதிக்கப்பட்ட கர்மவீரர் போன்ற ஒரு எளிமையான நல்லவரின் தலைமை தமிழகத்திற்கு இன்று மிக மிக அவசியம் என்ற எதிர்பார்ப்புடன் அந்த நல்லவருக்காகக் காத்திருக்கிறோம்.
வாழ்க தந்தை பெரியார் மற்றும் அமரர் எம்ஜியார் புகழ்!
கருத்துகள்
கருத்துரையிடுக