இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அடகுத் தமிழ் அறிவோம்

அன்னைத் தமிழில் ஏராளமான வடமொழிச் சொற்கள் புகுத்துப்பட்டு அவை இன்றளவும் நம் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருகிறோம். வடமொழிச் சொற்கள் பெரும்பாலும் ன் ஸ் த் ப் என்ற மெய் எழுத்துகளை முதன்மையாக (<முக்கியமாக - முக்யம்) கொண்டவை. எனவே இவற்றை எளிதாக (<சுலபமாக - சுலப்) வடமொழிச் சொற்கள் என்று நாம் புரிந்து கொண்டு அவற்றை தவிர்த்து நம் அன்னைத் தமிழில் அதற்கெனப் பொருள் தரும் சொற்களைப் பயன்படுத்த முடியும். பிரபஞ்சம் தரும் எமது ஆழ்மன உணர்வின்படி வடமொழிக்கு எழுத்து  வடிவமும் சொற்களும் வழங்கியதே நம் தமிழன்னைதான் என உறுதியாகச் சொல்ல முடியும்.  தமிழின் பெரும்பாலான எழுத்துக்களே வடமொழியில் இருப்பதே இதற்குச் சான்றாகும். அது சரி எவையெல்லாம் வடமொழிச் சொற்கள் என்று இன்னும் எளிதாக நாம் கண்டறிவது என்ற உங்கள் கேள்விக்கான பதிலை நம் தமிழன்னையே மிக அருமையாக விளக்கி உள்ளார்.  தமிழின் முதல் எழுத்து அகரம் எனத்தான் துவங்குகிறது. நம் அன்னைத் தமிழில் கலந்து விட்ட வட மொழிச் சொற்களின் முன் எழுத்தாக இந்த அகரம் எனும் சிகர எழுத்தை நாம் சேர்த்துப் பார்த்தாலே போதும் அவை வடமொழிச் சொற்கள்தான் என்பது உறுதிய...

உன்னை நான் சந்தித்தேன்! நீ ஆயிரத்தில் ஒருவன்!

ஐந்து வயதில் முதன் முதலாக நான் துவக்கப்பள்ளியில் சேர்ந்து எழுது பலகையை எனது வலது கையில்  பிடித்துக்கொண்டு இடது கையில் எழுதுகுச்சியால் எழுதத் துவங்கினேன். இதைக்கண்ணுற்ற எனது வகுப்பாசிரியை திருமதி புஸ்பா அவர்கள் எனது இடது கையில் தனது கரத்தில் இருந்த பிரம்பால் சில அடிகள் வைத்து என்னை வலது கையால் எழுதும்படி பயிற்றுவித்தார். அன்றைக்கிருந்த ஆசிரியர்களின் மனநிலையும் மக்களிடம் நிலவிய மூடத்தனமான தவறான எண்ணங்களும் இடது கையால் எழுதுவது தவறெனப்பட்டதின் விளைவினால் எனது எழுதும் பழக்கத்துடன் எனது தலையெழுத்தையும் அவர்கள் மாற்றி எழுதத் துவங்கிவிட்டதாகத்தான் கருதி வந்தேன்.  பொதுவாக இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் உலகத்தில் சுமார் ஆயிரத்தில் ஒருவராகத்தான் பிறக்கின்றனர். வலது கைப்பழக்கம் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் அமைப்பு எங்களைப்போன்ற இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இடம்மாறி இருப்பதால் எங்களின் அனைத்துப் பழக்க வழக்கங்களும் வலதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நேரெதிராகத்தான் இருக்கும். எந்தப் பொருளை எடுப்பதாக இருந்தாலும், மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களையும் நாங்கள் இடத...

தேவை ஒரு சர்வாதிகாரமற்ற மக்களுக்கான அரசியல் இயக்கம்.

சர்வாதிகார தலைமையற்ற சுழற்சி முறை கொண்ட தன்னலமற்ற நிர்வாகம் நிறைந்த அரசியல் மாண்பு. வாரிசுகளோ, உறவினர்களோ ஆதிக்கமற்ற அரசியல் கொள்கை, ஐந்தாண்டுக்கொருமுறை சுழற்சி முறையில் நிர்வாகிகள் மாறும் மாண்பு.  ஐந்தாம் தேன் தமிழ்ச்சங்கத்தில் இணையும் ஒவ்வொருவரும் தமிழகம் வளம் பெற வேண்டும் என்ற ஒத்த கருத்துடையவர்களாக பணியாற்றும் சமத்துவம். ஒவ்வொரு கிளை, ஒன்றியம், வட்டம், மாவட்டம், என எங்கும் சாதி, மத பேதமற்ற நிர்வாகிகள் கொண்ட சமத்துவ அரசியல் பண்பு, ஆட்சி நிர்வாகத்தில் அணு அளவும் தலையிடாத ஒழுக்கம், இயக்கச் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை, கொடி,  நிதி என மக்களிடமோ, மற்றவர்களிடமோ கையேந்தாமல் இணையம் வாயிலாக மட்டுமே செயல்படல், இன்னும் தேவைப்படும் ஏராளமான மாற்றங்களுடன் ஒரு மகத்தான அரசியல் இயக்கம் உருவாக்குவோம். தமிழ்நாடு மட்டுமல்ல உலகிற்கே இந்த அரசியல் இயக்கம் ஒரு முன்னோடி இயக்கமாகத் திகழ வேண்டும். இந்த இயக்கத்தின் அப்பழுக்கற்ற மக்கள் தொண்டெனும் உயரிய தன்மையால் இன்றுள்ள அரசியல் இயக்கங்கள் ஒன்றுகூட வரும் காலங்களில் மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடுவதற்குத் துளியும் வாய்ப்பின்றி ...