புதிய துறைகள்!
ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள், கால்வாய்கள், கண்மாய்கள், ஊருணிகள், அனைத்தையும் பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும்,
கனிம வளங்கள், மணல், தாது மணல், என தமிழகத்திலுள்ள அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்படுவதைத் தடுக்கவும்,
விளை நிலங்கள், அரசின் புறம் போக்கு நிலங்கள், வனப் பகுதிகள், போன்றவை அரசியல் இயக்கங்களால் வளைக்கப்படுவதை தடுக்கவும்,
அரசு நிலங்களும், மக்களிடமிருந்து அரசின் திட்டங்களுக்கெனக் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் இனி தனியாருக்கு விற்கப்படுவதைத் தவிர்க்கவும், தனியாரிடமுள்ள அரசு நிலங்கள் மீட்கப்படவும்,
சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கவும், சுற்றுச்சூழலுக்கு எதிரானவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட தனிமனிதப் பங்கினை மேம்படுத்தவும்,
இது போன்ற ஏராளமான நல்வழித் திட்டங்களுக்கென
புதிதாகத் துறைகள் ஏற்படுத்தப்படும்.
இந்தத் துறைகளில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் என எவருமே அங்கம் வகிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
முழுக்க முழுக்க அந்தந்தப் பகுதி மக்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் , வெளிப்படையான நிர்வாகத்துடன், மக்களுக்கெனப் பாடுபடும் உண்மையான சாதிமத பேதமற்ற மக்கள்நலத் தொண்டர்கள் மட்டுமே நிறைந்த ஒரு மகத்தான துறைகளாக இவை இனி திகழும்.
ஊழலுக்கு முடிவு கட்ட வேண்டுமெனில் முதலில் ஊழல் நிர்வாகங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.
எனவே இனி ஒரு விதி செய்வோம். அதனை எந்த நாளும் காப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக