தொலைந்து போன ஆறுகள்!
மழை காலங்களில் பெருகும் ஆற்று நீரைக் குறைவான மக்கள் தொகை இருந்த காலத்திலும் நம் முன்னோர்கள் நிலம் குழிந்த இடங்களில் எல்லாம்
ஏராளமான ஏரிகளையும், குளங்களையும் வெட்டிக் கால்வாய்கள் வழியாகக் கொண்டு சேர்த்து வெள்ள நீரைச் சேமித்து வந்துள்ளனர்!
இன்றைக்கும் நம் கண் முன்னே பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் ஏரிகள் குளங்களே இதற்கான சாட்சியாகும்!
குறிப்பாகக் காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரம்மாண்டமான குளங்கள்!
நம் முன்னோர்களின் மனித உழைப்;பும் இயற்கையைச் சரிவர நிர்வகிக்கும் ஆற்றலும் அளவிட இயலாதது!
இன்றோ நாம் எல்லாவற்றையும் இழந்த நிலையில் உள்ளோம்!
அதுவாவது பரவாயில்லை! இருப்பதையாவது தக்க வைத்துள்ளோமா என்பதுதான் இன்றைய கேள்வி!
ஏரிகள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிரமிப்புச் செய்து அங்கு அவை இருந்த இடமே சுத்தமாகத் தெரியாமல் வீட்டு மனைகளாக்கப்பட்டுள்ளன.
இயற்கையாகவே நீர் குழிந்த இது போன்ற இடங்களில் கடும் மழைக் காலங்களில் வெள்ள நீர் வழக்கம் போலத் தன் இருப்பிடம் தேடி வரும்போது அந்த இடத்தில் முளைத்துள்ள வீடுகளைச் சூழ்ந்துவிட மக்கள் இயற்கை தமக்குச் சதி செய்வதாகக் கற்பனை செய்து கொள்கின்றனர்!
நம் முன்னோர்கள் கடின உழைப்பில் கட்டிய ஏரிகளுக்கும், குளங்களுக்கும் ஆறுகளில் இருந்து வரும் வழிப்பாதையை முற்றிலும் அடைத்து விட்டுக்
குறிப்பாகக் குளங்களில் நம் முன்னோர்கள் நீர் வருவதற்கும், குளம் நிறைந்து வெளியேறுவதற்கும் ஏற்படுத்தியிருந்த வழிகளை முற்றிலும் அடைத்து விட்டு தேங்கி நாறும் நீரில் குளித்து யானைக்கால் முதலிய வியாதிகளை வாங்கித் தவிக்கின்றனர்.
எங்கள் ஊரைச் சரி சமமாகப் பிரித்து இரு புறமும் பாயும் ஆற்றின் பெயர் பொன்னி!
சேலம் மாவட்டம் கஞ்ச மலையிலிருந்து புறப்பட்டு வரும் இவள் பெயருக்கேற்ப பொன் எனப்படும் பொன் துகள்கள் சுமந்து வருபவள்!
எனக்கு விபரம் தெரிந்த காலத்திலேயே இவளது மணற் பரப்பில் எங்கள் ஊர் பொன் தச்சர்கள் மணலைச் சலித்துப் பொன் கொழிப்பர்.
இன்றோ இவளது பாதை ஆக்கிரமிப்பாளர்களால் தடைபட்டுப் பரிதாபமாகிவிட்டது.
போதாக குறைக்கு அண்மையில் போடப்பட்ட தங்க நாற்கரச் சாலை முற்றிலும் இவளது இடத்தை ஆக்கிரமித்துவிட
இன்று இவள் தன் வழித் தடத்தை இழந்து வேறு இடம் தேடப் போக எங்கள் ஊரின் ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் மழைக் காலத்தில் வெள்ள நீரில் மிதக்கும் அவல நிலையை எதிர் கொள்கின்றனர்!
இவளைப் போலவே சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையிலிருந்து புறப்படும் திருமணிமுத்தாறு எனும் ஆறு அங்கிருந்து சுமார் நூறு கிலோ மீட்டர்கள் பயணித்து நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு அருகே காவிரியில் கலக்கிறாள்!
அவளது பாதையிலும் இன்று ஏராளமான ஆக்கிரமிப்புகள்!
மேலும் இவள் உற்பத்தியாகும் சேர்வராயன் மலையில் உள்ள மரங்களில் பெரும்பாலானவை வெட்டப்பட்டு அவ்விடங்களில் காப்பித் தோட்டங்கள் உருவானதால் தடைபட்ட மழை வளத்தால்
இவள் இன்று சேலத்தின் கூவமாகப் பரிதாபமாகக் காட்சியளிக்கிறாள்!
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மழைக்காலங்களில் நுங்கும் நுரையுமாகப் புறப்பட்டு வந்து பரவசப்படுத்திய இந்த இரண்டு ஆறுகளும் இன்று இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விட்டன!
உதாரணத்திற்கு மட்டுமே இவை இரண்டும்!
தமிழகத்தில் நாற்பது ஆண்டுகளுக்குள் தொலைந்து போனது இந்த இரண்டு ஆறுகள் போல எத்தனையோ?
இவற்றின் தற்போதய நிலையும்,
எங்கள் ஊரில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஏரி ஒன்று என் கண்முன்னே இன்று வீட்டு மனைகளுடனும், புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளுடனும் காட்சியளிப்பதையும் காணும்போதும் என்னுள் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு!
இழந்து விட்ட இது போன்ற ஆறுகளால் தடைபட்டுப் போன வெப்பச் சலனமும் தமிழகத்தில் மழை வளம் குறைவதற்குக் காரணமாகிறதே!
ஏராளமான எந்திர ஆற்றல் நிறைந்த இந்தக் காலத்தில் இது போன்று தொலைந்து போன ஆறுகளைப் புதுப்பிப்பதுவும் அவற்றை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அப்புறப்படுத்துவதும் முடியாத காரியமல்ல!
ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அரசியல் தலைமைகளைத்தான் நாம் ஆதரித்து வந்து நம் வாழ்க்கையைத் தொலைத்து வருகிறோம்!
பொன்னி ஆற்றங்கரையில் பிறந்து வளர்ந்தும் இன்று அந்த ஆந்றின் மழைக்கால மண் வாசனையோடு கூடிய வரவை இழந்து தவிக்கும் எம் மக்கள்
இயற்கையைப் புரிந்து கொள்வது எப்போது?
ஊழல் இயக்கங்களுக்கே மாறி மாறி வாக்களித்து விட்டு இழந்து விட்ட இது போன்ற நன்மைகளை நினைந்து மனம் திருந்துவது எப்போது?
விடை தெரியாத கேள்விகள் எம்முள் ஏராளமாக எழுகின்றன!
மீண்டும் அந்தப் பழைய வசந்த காலம் உருவாகுமா?
தொலைந்து போன அந்த ஆற்றில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பொன்னால் ஆன சிலையாக ஒரு அழகிய பெட்டியில் மிதந்து வந்து
எங்கள் ஊரில் நிரந்தரமாகக் குடியிருக்கும் அந்த மழை தெய்வமான மாரியம்மன்தான்
இந்த விடை தெரியாத கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்!
ஏராளமான ஏரிகளையும், குளங்களையும் வெட்டிக் கால்வாய்கள் வழியாகக் கொண்டு சேர்த்து வெள்ள நீரைச் சேமித்து வந்துள்ளனர்!
இன்றைக்கும் நம் கண் முன்னே பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் ஏரிகள் குளங்களே இதற்கான சாட்சியாகும்!
குறிப்பாகக் காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரம்மாண்டமான குளங்கள்!
நம் முன்னோர்களின் மனித உழைப்;பும் இயற்கையைச் சரிவர நிர்வகிக்கும் ஆற்றலும் அளவிட இயலாதது!
இன்றோ நாம் எல்லாவற்றையும் இழந்த நிலையில் உள்ளோம்!
அதுவாவது பரவாயில்லை! இருப்பதையாவது தக்க வைத்துள்ளோமா என்பதுதான் இன்றைய கேள்வி!
ஏரிகள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிரமிப்புச் செய்து அங்கு அவை இருந்த இடமே சுத்தமாகத் தெரியாமல் வீட்டு மனைகளாக்கப்பட்டுள்ளன.
இயற்கையாகவே நீர் குழிந்த இது போன்ற இடங்களில் கடும் மழைக் காலங்களில் வெள்ள நீர் வழக்கம் போலத் தன் இருப்பிடம் தேடி வரும்போது அந்த இடத்தில் முளைத்துள்ள வீடுகளைச் சூழ்ந்துவிட மக்கள் இயற்கை தமக்குச் சதி செய்வதாகக் கற்பனை செய்து கொள்கின்றனர்!
நம் முன்னோர்கள் கடின உழைப்பில் கட்டிய ஏரிகளுக்கும், குளங்களுக்கும் ஆறுகளில் இருந்து வரும் வழிப்பாதையை முற்றிலும் அடைத்து விட்டுக்
குறிப்பாகக் குளங்களில் நம் முன்னோர்கள் நீர் வருவதற்கும், குளம் நிறைந்து வெளியேறுவதற்கும் ஏற்படுத்தியிருந்த வழிகளை முற்றிலும் அடைத்து விட்டு தேங்கி நாறும் நீரில் குளித்து யானைக்கால் முதலிய வியாதிகளை வாங்கித் தவிக்கின்றனர்.
எங்கள் ஊரைச் சரி சமமாகப் பிரித்து இரு புறமும் பாயும் ஆற்றின் பெயர் பொன்னி!
சேலம் மாவட்டம் கஞ்ச மலையிலிருந்து புறப்பட்டு வரும் இவள் பெயருக்கேற்ப பொன் எனப்படும் பொன் துகள்கள் சுமந்து வருபவள்!
எனக்கு விபரம் தெரிந்த காலத்திலேயே இவளது மணற் பரப்பில் எங்கள் ஊர் பொன் தச்சர்கள் மணலைச் சலித்துப் பொன் கொழிப்பர்.
இன்றோ இவளது பாதை ஆக்கிரமிப்பாளர்களால் தடைபட்டுப் பரிதாபமாகிவிட்டது.
போதாக குறைக்கு அண்மையில் போடப்பட்ட தங்க நாற்கரச் சாலை முற்றிலும் இவளது இடத்தை ஆக்கிரமித்துவிட
இன்று இவள் தன் வழித் தடத்தை இழந்து வேறு இடம் தேடப் போக எங்கள் ஊரின் ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் மழைக் காலத்தில் வெள்ள நீரில் மிதக்கும் அவல நிலையை எதிர் கொள்கின்றனர்!
இவளைப் போலவே சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையிலிருந்து புறப்படும் திருமணிமுத்தாறு எனும் ஆறு அங்கிருந்து சுமார் நூறு கிலோ மீட்டர்கள் பயணித்து நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு அருகே காவிரியில் கலக்கிறாள்!
அவளது பாதையிலும் இன்று ஏராளமான ஆக்கிரமிப்புகள்!
மேலும் இவள் உற்பத்தியாகும் சேர்வராயன் மலையில் உள்ள மரங்களில் பெரும்பாலானவை வெட்டப்பட்டு அவ்விடங்களில் காப்பித் தோட்டங்கள் உருவானதால் தடைபட்ட மழை வளத்தால்
இவள் இன்று சேலத்தின் கூவமாகப் பரிதாபமாகக் காட்சியளிக்கிறாள்!
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மழைக்காலங்களில் நுங்கும் நுரையுமாகப் புறப்பட்டு வந்து பரவசப்படுத்திய இந்த இரண்டு ஆறுகளும் இன்று இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விட்டன!
உதாரணத்திற்கு மட்டுமே இவை இரண்டும்!
தமிழகத்தில் நாற்பது ஆண்டுகளுக்குள் தொலைந்து போனது இந்த இரண்டு ஆறுகள் போல எத்தனையோ?
இவற்றின் தற்போதய நிலையும்,
எங்கள் ஊரில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஏரி ஒன்று என் கண்முன்னே இன்று வீட்டு மனைகளுடனும், புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளுடனும் காட்சியளிப்பதையும் காணும்போதும் என்னுள் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு!
இழந்து விட்ட இது போன்ற ஆறுகளால் தடைபட்டுப் போன வெப்பச் சலனமும் தமிழகத்தில் மழை வளம் குறைவதற்குக் காரணமாகிறதே!
ஏராளமான எந்திர ஆற்றல் நிறைந்த இந்தக் காலத்தில் இது போன்று தொலைந்து போன ஆறுகளைப் புதுப்பிப்பதுவும் அவற்றை ஆக்கிரமிப்பு செய்தவர்களை அப்புறப்படுத்துவதும் முடியாத காரியமல்ல!
ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அரசியல் தலைமைகளைத்தான் நாம் ஆதரித்து வந்து நம் வாழ்க்கையைத் தொலைத்து வருகிறோம்!
பொன்னி ஆற்றங்கரையில் பிறந்து வளர்ந்தும் இன்று அந்த ஆந்றின் மழைக்கால மண் வாசனையோடு கூடிய வரவை இழந்து தவிக்கும் எம் மக்கள்
இயற்கையைப் புரிந்து கொள்வது எப்போது?
ஊழல் இயக்கங்களுக்கே மாறி மாறி வாக்களித்து விட்டு இழந்து விட்ட இது போன்ற நன்மைகளை நினைந்து மனம் திருந்துவது எப்போது?
விடை தெரியாத கேள்விகள் எம்முள் ஏராளமாக எழுகின்றன!
மீண்டும் அந்தப் பழைய வசந்த காலம் உருவாகுமா?
தொலைந்து போன அந்த ஆற்றில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பொன்னால் ஆன சிலையாக ஒரு அழகிய பெட்டியில் மிதந்து வந்து
எங்கள் ஊரில் நிரந்தரமாகக் குடியிருக்கும் அந்த மழை தெய்வமான மாரியம்மன்தான்
இந்த விடை தெரியாத கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்!
கருத்துகள்
கருத்துரையிடுக