வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்!
பிரதமர் சென்னை வருகை வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்!
முதல்வர் திருச்சி வருகை ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிப்பு!
பிரச்சினைக்குரிய தலைவர் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன!
இது போன்ற செய்திகளை நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்க நேர்கிறது!
ஒரு சனநாயக நாட்டில் தலைவர்களின் பாதுகாப்பிற்கெனச் செலவிடப்படும் தொகையைக் கொண்டே ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்றிவிடலாம்!
அந்த அளவிற்கு இன்றுள்ள தலைவர்களின் பாதுகாப்பிற்கென ஏராளமான வரித்தொகை இது போன்ற செலவினங்களுக்காகத் திருப்பி விடப்படுகிறது!
தலைவர்களுக்குக் கடுமையான பாதுகாப்பு தேவைப்படும் நிலை உள்ளதென்றால்
இவர்கள் தங்களிடமுள்ள ஏதோ ஒருவித குறையினால் எதிரிகளைப் பெற்றுள்ளனர் என்றுதான் அர்த்தம்!
ஒருபக்கம் எதிரிகளைக் கொண்டுள்ள இவர்கள் மறுபக்கம் மக்களின் ஆதரவினையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது!
அப்படியெனில் இவர்கள் நிச்சயம் அனைத்து மக்களின் ஆதரவினையும் பெற்ற சமநிலைத் தலைவராக விளங்கவில்லை என்றுதான் நாம் எண்ணத் தோன்றுகிறது!
எது எப்படியாயினும் இவர்கள் பொதுமக்களிடமிருந்து பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிரித்து வைக்கப்படுகின்றனர் என்பதுதான் உண்மை நிகழ்வாகும்!
அனைத்து தரப்பு மக்களின் நன் மதிப்பையும் பெற்ற உயர்குணத் தலைவர்களுக்குப் பெரிய அளவிலான பாதுகாப்புகள் தேவையற்றது என்பதை
தமிழ்நாட்டில் நம் பெருந்தலைவர் காலத்திலேயே கண்டுள்ளோம்!
அரசு அலுவலர்களின் கெடுபிடிகள், இயக்க முன்னோடிகளின் கெடுபிடிகள் இன்றி
மக்களோடு மக்களாகச் சரி சமமாகப் பழகிய பெருந்தலைவர் போன்ற தலைவர்களை இன்று நாம் காண்பது அறிதாகிவிட்டது!
பொதுமக்களிடமிருந்து விலகியிருந்து வெறும் இலவசத் திட்டங்களால் மட்டுமே மக்களை வளைத்துவிட முடியும் என இன்றைய அரசியல் தலைவர்கள் தப்புக் கணக்குப் போடுவதன் விளைவும்,
இன்று இது போன்ற தலைவர்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் ஏராளமான மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதற்குக் காரணமாகிறது!
எளிமையான மக்கள் தொண்டர்கள் அரசியலுக்கு வந்தால்தான்
இது போன்று அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கெனச் செலவிடப்படும் ஊதாரித்தனச் கெலவினங்கள் அடியோடு தொலைந்து
மக்களின் வரிப்பணம் மீதப்பட்டு மக்கள் நலத் திட்டங்களை ஊழலின்றி நீண்ட வருடங்கள் பயன்படுமாறு நிறைவேற்ற முடியும்!
மக்களின் காவல் பணிக்கென ஊதியம் பெறும் உயர் அலுவலர்கள் தொடங்கி
சாதாரணக் காவலர் வரை அரசியல்வாதிகளின் வருகைக்காக,
தம் அன்றாட மக்கள் நல அலுவல் பணி உழைப்பினைத் தவிர்த்துவிட்டு
கடும் வெயிலிலும் மழையிலும் தங்களின் காவல் பணியைக் கால்கடுக்க
இது போன்ற பாதுகாப்புத் தேவைப்படும் தலைவர்களுக்காகச் செலவிடும் நிலை
அடியோடு தொலையும் நிலை என்று வருகிறதோ
அன்றுதான் உண்மையிலேயே இது சனநாயக நாடு எனப் போற்றப்படும் நிலையும் உருவாகிவிட்டது என அர்த்தம்!
கருத்துகள்
கருத்துரையிடுக