காந்தியார் வழங்கிய அகிம்சை குணங்கள்!
மகாத்மா அவர்கள் அகிம்சா வழியில் போராடி நம் நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கித் தந்துவிட்டு மறைந்தாலும்
அவர் வழி காட்டிய அகிம்சை குணம் மட்டும் நம் மக்களிடமிருந்து அகலவே இல்லை எனலாம்!
நம் தமிழக மக்களில் பெரும்பாலானோர் தங்களுக்குப் பிடித்த சின்னங்களுக்கும்,
தங்களுக்குப் பிடித்த இயக்கங்களுக்கும்தான் வாக்களிப்போம் எனப் பிடிவாத மனப்பான்மையுடன் வாக்களித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக எந்த இயக்கம் அதிகப் பணம் கொடுக்குமோ அந்த இயக்கத்திற்கு பணம் பெற்ற விசுவாசம் குறையாமல்
வேறு எவருக்கும் வாக்களிக்காது அந்த இயக்கத்திற்கே வாக்களிப்பதில் கடமை தவறாதவர்களாக விளங்குகின்றனர்.
மக்களின் விசுவாசமும் நன்றி உணர்வும் பாராட்டத் தக்கதுதான். ஆனால் இந்த நன்றி உணர்வால் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்ந்து விடுகின்றனவா என்றால் அது கேள்விக்குறிதான்!
குடி தண்ணீர்,
சாலை வசதி
பேருந்து வசதி,
மின்சார வசதி,
சாக்கடை வசதி,
சுகாதார வசதி,
பள்ளிக் கட்டிடம்,
வீட்டு வசதி,
இது போன்ற ஏராளமான அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டாமலே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தல் திருவிழாக்களை எதிர் கொள்கின்றனர்!
குண்டும் குழியுமான சாலைகள்,
இருளில் தவிக்கும் கிராமங்கள்,
புளி மூட்டைப் பேருந்துப் பயணங்கள்,
சுகாதாச வசதியற்ற பேருந்து நிலையங்கள்,
மலிவு விலை உணவகங்கள்,
மண்எண்ணை உள்ளிட்ட குடிமைப் பொருட்கள் (மண் எண்ணைக்கு மட்டும் அதிகாலை 4 மணிக்கே நீண்ட வரிசையில் அமர்ந்திருக்கும் முதியோர்களைக் காணும்போதெல்லாம் வேதனை அதிர்வுகள் எழும்)
அரசின் நல உதவித் திட்டங்கள்,
மருத்துவ வசதி,
எனப் பல்வேறு காரணங்களுக்காகக் கால் கடுக்கப் பல மணி நேரங்கள் காத்திருப்பதைச் சுகமானதாகக் கருதிக்கொண்டு,
ஒரு வித அகிம்சை குணத்துடனேயே வாழ்ந்து தொலைப்பது எனத் தீர்மானமாகவே உள்ளனரோ நம் தமிழக மக்கள் என அஞ்சத் தோன்றுகிறது!
கருத்துகள்
கருத்துரையிடுக