இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிர்வாகச் சீர் திருத்தச் சிந்தனை

என்னுடைய 17 ஆவது வயதில் ஆட்டோமொபைல்ஸ் துறையில் அடியெடுத்து வைத்தேன். பெரிய பெரிய கனவுகள். வணிகத்தை விரிவு செய்யக் கணினி மயமாக்குதல், ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தல், ஏராளமான செல்வம் சேர்த்து உறவுகளுக்கும் மற்றவர்களுக்கும் உதவுதல் போன்ற எதிர்பார்ப்புகளுடன் தான் என்னுடைய வணிகத்தை துவக்கி இருந்தேன். கர்மவீரரின் நேர்மை குணம் என் இதயத்தில் நுழைந்து உடலெங்கும் இரத்த நாளங்கள் ஆகப் பரவி ரத்தம் போல் ஓயாது வேலை செய்து கொண்டிருந்தது.  எனினும் என்னுடைய கனவுகள் தகர்ந்து கடுமையான நட்டத்துடன் எனது நாற்பத்தி மூன்றாவது வயதில் வணிகம் ஒரு முடிவுக்கு வந்தது.  அடுத்த நாடோடிப் பயணம் ஈரோடு நோக்கி. இங்கு நான் வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எழுந்தது. நானும் வேலைக்குச் செல்ல முடிவு செய்தேன். முதலில் பால் பண்ணையில் வேலை. அதற்கு என் உடல்நிலை ஒத்து வராததால் எழுதுபொருள் விற்பனை அங்காடியில் வேலை. என்னைப் புரிந்து கொள்ளாத மற்றவர்களால் அடுத்தடுத்து வேறு வேறு நிறுவனங்களில் வேலை செய்ய விதி அழைத்துச் சென்றது.  வணிகத்தில்அடிபட்ட நிலையிலும் நான் வேலைக்குச் சென்ற இடங்களில் எல்லாம் அங்குள்ள குறைகளை முத