இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஞான தேசிகன் சித்தர்

ஈரோடு மண்ணுக்கு நான் வந்தபோது எனது மைத்துனரின் சித்த மருத்துவ ஆசானாக அறிமுகம் ஆனவர்தாம் திரு ஞான தேசிகன் அவர்கள்.  அவரது மருத்துவ வித்தை குறித்தும் அவரிடமுள்ள ஆன்மீக சக்தி பற்றியும் எனது மைத்துனர் வாயிலாக அறியத் துவங்கிய நான் ஒரு நாள் அவரைச் சந்திப்பதற்காக அவரது சித்த மருத்துவமனை அமைந்திருந்த சிவன் மலை அடிவாரத்திற்குச் சென்றேன். என்னை ஒரு மகனைப் போல அன்பு காட்டி வரவேற்ற அவரை இரண்டாவது முறையாக நான் சந்தித்தபோதுதான் என்னை அறியாமலேயே அவரது வழி காட்டுதலுக்கு ஆளாகத் துவங்கினேன்.  இரண்டாவது முறை என்று நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் நான் முதன் முறையாக அவரைச் சந்தித்ததே கன்னியாகுமரியில்தாம். அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்ததற்கு முதல்நாள் எனது துணைவியின் அத்தை மகன் ராஜ்குமார் திருச்சியில் இருந்து என்னைக் காண்பதற்காக கருவூர் வந்திருந்தார்.  நான் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது எனது மூத்த மைத்துனர் குடும்பத்துடன் எனது துணைவியும் தவசி அவர்களுடன் கன்னியாகுமரிக்கு ஆன்மீகப் பயணமாகச் சென்று இருப்பதைப் பற்றி நான் எடுத்துரைத்து அதோடு விடாமல் நாம் இருவரும் கன்னியாகுமரிக்குச் செல்வோமா எனக் கேட்க

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா

இந்தப் பாடல் வரிகள் கொடுக்கும் உத்வேகம் முற்றிலும் எனக்காகவே என்றே நான் நினைக்கிறேன்.  மக்கள் திலகத்தை அறவே பிடிக்காத என்னை என் இளமையில் உறவினர் எவரோ வலுக்கட்டாயமாக இந்தத் திரைப்படம் பார்க்க என்னை அழைத்துச் சென்றது இன்றும் என் மனதில் நிழலாடுகிறது. அப்பொழுது எங்கள் ஊரில் இருந்த ஒரே திரை அரங்கின் பெயர் புஷ்பா டூரிங் டாக்கீஸ். இது என் பெரியப்பா திரு. துளசிபிள்ளை அவர்களின் சம்பந்தியும் என் மனம் கவர்ந்த சகோதரி சிங்காரவேல் ராஜேஸ்வரியின் மாமனார் MR என்று அழைக்கப்பட திரு.ராமசாமி அவர்களால் நடத்தப் பட்ட திரை அரங்கம். அன்றைய தினம் இந்தப் படத்தைப் பார்க்க எங்கள் ஊர் மட்டுமன்றி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரண்டு வந்திருந்த மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கூட்டம் மூன்று மடங்காகத் திரண்டிருந்த காரணத்தால் எங்களால் திரை அரங்கு உள்ளே செல்ல இயலாமல் போனது. எனினும் நாங்கள் வெகு நேரம் அங்கே வெளியில் இருந்தவாறு படத்தின் கதை வசனத்தைக் கேட்டவாறு இருந்தோம். படம் முழுக்க திரை அரங்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த ஆரவாரம். விசில் சப்தம் காதைக் கிழிக்க அதையும் தாண்டி அதிக வால்யூமுடன் இந்தப் பாடல் இன்றும் என் காதுகளி

ஊழலில் உதிர்ந்த மலர்கள்

நேற்று காலை எனது 10 வயதில் கல்வி பயின்ற ஐந்தாம் வகுப்பு தொடக்கப் பள்ளியை கடந்து செல்லும்போது என்னை அறியாமல் அங்கு ஒருகணம் நின்று விட்டேன்  என் கண்களில் முதலில் பட்டது நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது இருந்த கட்டிடம் இந்த கட்டிடம் எனது ஐந்து வயதில் கட்டப்பட்டது  அதாவது கிட்டத்தட்ட 55 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தது இதனைக் கட்டியவர் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் இருந்த ஒரு கட்டுமான ஒப்பந்ததாரர்  அதற்கு அருகிலேயே இரண்டுமுறை இழுத்துக் கட்டப்பட்டு தற்போது வட்டார கல்வி அலுவலர் அலுவலகமாக செயல்படும் பார்க்க வெளிப்பூச்சு அழகாக தோன்றும் உள்ளே உளுத்துப்போன ஊழல் கட்டுமானக் கட்டிடம் ஒன்றும் காட்சியளித்தது  நான் பெரும்பாலும் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள அரசு கட்டிடங்களின் நிலையைத்தான் கவனிப்பது வழக்கம்  இந்தக் கட்டிடங்களில் வெள்ளையர்கள் ஆண்ட போதும் வெளியேறிய நாள் வரை கட்டப்பட்டு இன்று வரையும் கூட உறுதியாக நிற்கும் கட்டிடங்களையும் காண்பேன்  பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் நாடு இருந்த வறிய நிலைக்கு ஏற்ப குறைந்த வரி ஆதாரத்தில் எளிமையாகக் கட்டப்பட்ட கட்டிடங்களையும்

தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் ஒரு ஒப்புமை

நம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர் யார் என்று அறியாதவர்களே மிக அதிகம் அதே போன்ற நிலைதான் வடக்கிலும் தேசிய கீதம் பாடியவர் யார் என்று அறியாதவர்களும் பெரும்பான்மை ஆக இருக்கக் கூடும். முன்னதை நான் ஈரோட்டில் ஒரு ஆய்வின் வாயிலாக அறிய முடிந்தது பின்னதை ஜெய் கிண்டியா ஆட்கள்தாம் ஆய்வு செய்து அறிவு தெளிதல் வேண்டும். தலைப்புக்கு உள்ள விளக்கம் இங்கு யாதெனில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலிலும் தேசிய கீதப் பாடலிலும் பரத கண்டம் பாரத என்ற சொல்லே இடம் பெற்று உள்ளது என் ஆய்வின்படி கவுரவர் பாண்டவர் யுத்தம் இன்னும் முடிவு பெறவே இல்லை கவுரவர் ஆரிய இனம் பாண்டவர் தமிழர் வரலாறு தன்னையே திருப்பிக் காட்டும் போது இந்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்தே தீரும் அகண்ட(மகா வட மொழி)பாரதம்  முழுவதும் அற தெய்வமாம் தமிழ்அன்னையின் ஆட்சியின் கீழ் வரும். இது காலத்தின் கட்டாயம் அவாளுக்கு கலி யுகம் முடியும் காலம்  வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது வேங்கை யாரடா அது சோழப் பேரரசின் மாமன்னன் முருகன்தானடா

கணினி வேலை செய்யும் பெண்களின் கனிவான கவனத்திற்கு

என்னுடைய 45 வயது முதல் தற்போது வரை சொந்த வணிகத்தில் இருந்து விட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை. இது வரை எட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்துள்ளேன். இங்கு பணியாற்றிய சக இளைய சமுதாயப் பெண்கள் அனைவருமே பின் வரும் தவறுகளைச் செய்து வருவதை நான் வேதனையுடன் அனுமானித்து வந்துள்ளேன். தங்களுக்கு ஒதுக்கி உள்ள கணினிகளை விசைப் பலகை உட்பட தினசரி வேலை துவக்கும் முன்பு சுத்தம் செய்தல் கிடையாது. நாட்கணக்கில் இவை தூசு படிந்த நிலையில் அப்படியே பயன்படுத்துவர். தாங்கள் அமரும் இருக்கையைக்கூடச் சுத்தம் செய்தல் கிடையாது. மேலும் துப்புரவுப் பணியாளர் வரவில்லை அல்லது அவர் வரத் தாமதம் ஆனால் தங்களின் இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு அமர்ந்து பணி செய்வதும் கிடையாது. கோப்புகளைப் பராமரிப்பதில் கூட இதே நிலை. தூசு பறக்கும். மேலும் கணினியில் தாங்கள் செய்யும் வேலைகளை முறையாக ஒரு கோப்பில் இட்டுப் பராமரிப்பதும் கிடையாது. சக நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் அதன் காரணமாக அதி அவசியமான வேலைகளை அரை குறையாகச் செய்து உரிமையாளர் அல்லது மேலாளர்கள் வசம் திட்டு வாங்குவதும்  போதாக்குறைக்கு கைபேசியில் மணிக்கணக்கில் தேவையற்ற அரட்டை அடிப்

சங்கு ஊதுவது உங்களுக்காகவும் இருக்க வேண்டாமே

நேற்று மதியம் இரண்டு முப்பது மணி அளவில் என்னுடைய மகளின் கல்விப்பணி வேலை காரணமாக ஈரோடு நகரில் இருந்து  வள்ளி புரத்தான்பாளையம் வரை செல்ல வேண்டி இருந்தது  என்னுடைய வாகனம் கரூர் பெருந்துறை புறவழிச்சாலையைக் கடக்கும் முன்பு சைரன் என்ற சங்கு ஊதும் சத்தம் கேட்டது சாலையைக் கடக்காமல் வாகனத்தை நிறுத்திவிட்டு கிழக்கு திசையை நோக்கிப் பார்த்தால் யாரோ ஒரு தமிழக அமைச்சரின் வாகனம் வருவதை அறிவிப்பதற்காக ஒரு காவல்துறை வாகனம் சங்கூதியபடி வந்தது.  அதனைத் தொடர்ந்து ஒரு அரசியல்வாதி வாகனம் அதற்கு அடுத்து அமைச்சரின் வாகனம் இதற்குப் பின் சில எடுபிடிகள் வாகனம் கடைசியாக சேலம் மாநகர ரோந்துப் பணி வாகனம் வந்து இந்த அணிவரிசை முடிவுக்கு வந்தது. அனைத்து வாகனங்களுமே 120 கிலோமீட்டர் வேகத்தில் தான் வந்தன. தமிழ்நாடு அரசின் 108 வாகனத்தில் நூறில் சென்றால் 108 ல் தான் போக வேண்டும் என்ற வாசக வரிகள் தான் என் மனதில் ஓடியது காவல்துறை அன்பர்களே நண்பர்களே வேகக் கட்டுப்பாடு என்பது மக்களுக்கு மட்டும்தானா  மக்களுக்காக அரசியல்வாதிகளா அரசியல்வாதிகளுக்காக மக்களா இவ்வளவு வேகத்தில் அவர்கள் சென்று அடையப் போவது ஏதேனும் ஒரு ஓய்வு விடுதியில் த

தோல்வியா வெற்றியா

இரு நூற்று ஐம்பது பேர் வேலை செய்யும் இடத்தில் வேலை தேடிப் போனேன்  என்னைப் புரிந்து கொள்ளாத சிலரைத் தவிர மற்றவர்களின் நன் மதிப்பைப் பெற்று  சில நடைமுறைகள் பிடிக்காமல் 80 நாட்கள் கழித்து வெளியேறி விட்டேன் என்னைப் புரிந்து கொள்ளாதவர்களைப் பொறுத்தவரை நான் தோற்று ஓடியவனாக நினைக்கலாம் என்னைப் பொறுத்தவரை நான் அங்குள்ள பெரும்பாலானவர்களின் அன்பைச் சுமந்து வெற்றியாளனாக விடை பெற்றவன்

இனி ஒரு விதி செய்வோம்_வாக்குரிமை

தமிழ் நாடு வந்தாரை வாழவைக்கும் மண். இந்த மண்ணை ஆள இந்த மண் சார்ந்த மக்களுக்கே உரிமை உண்டு. இங்கு வந்து வாழும் பிற மாநில மொழி சார்ந்த மக்கள் இரண்டு வகையினர். ஒன்று காலம் காலமாக இருந்து வருபவர்கள்.  இரண்டாவது தங்கள் மாநிலத்தில் வாழ வழியின்றி தமிழகம் நோக்கிப் பஞ்சம் பிழைக்க வருபவர்கள். இவர்களுக்கு மத்திய மதவாத அரசின் ஒரே நாடு ஒரே ரேசன் என்ற கோட்பாடுக்கு மட்டுமே உரிமை தரலாம். வாக்களிக்கும் உரிமை இங்குள்ள ஆட்சி அதிகாரத்துக்கு போட்டியிடும் உரிமையை இனி அவர்கள் அனைவரும் கோர முடியாது என்று சட்டம் செய்வோம். அவர்கள் தாங்கள் பிறப்பெடுத்த மாநிலத்தில் அமைந்துள்ள சொந்த தொகுதியில் மட்டுமே இனி வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயச் சட்டம் கொண்டு வருவோம். இதற்காக இவர்கள் எல்லாம் சொந்த ஊருக்கு தேர்தல் காலத்தில் பயணிக்க வேண்டிய அவசியம் இன்றி அஞ்சல் வாக்காக தனக்கு விருப்பப்படும் வேட்பாளருக்கு அதாவது அவர்கள் மாநிலத்தில் உள்ள வேட்பாளருக்கு மட்டுமே இனி வாக்களிக்க முடியும். அதே போல அவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பினால் தங்கள் மாநிலத்தில் உள்ள சொந்த தொகுதியில் அல்லது அங்குள்ள தனக்கு செல்வாக்கு மிக்க வேறு ஒரு இடத்

காப்பீட்டு நிறுவனங்கள் அறிவோம்

பயிர்க் காப்பீடு, வாகனக் காப்பீடு, உடமைக் காப்பீடு, வங்கிப் பணப் பாதுகாப்புக் காப்பீடு, இவை தவிர மனித உயிருக்கு வாழ்நாள் காப்பீடு, மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கும் காப்பீடு என இன்று உலகம் முழுவதும் காப்பீட்டு முறைத் திட்டங்கள் ஏராளமான அளவில் நடைமுறைப் படுத்தப்பட்டு அதற்கென ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். பாரத நாட்டில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்களுடன் முதன்மை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. வாகனக் காப்பீட்டில் தேசிய காப்பீட்டுக் கழகம் முன்னாட்களில் சிறப்புடனும் இன்றைய நாட்களில் பரிதாபம் ஆன நிலையிலும் உயிருக்குப் போராடி வந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டு மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க இன்றைய மதவாத மத்திய அரசு வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றது. இது போன்ற காப்பீட்டு திட்டங்களின் நோக்கம் என்ன? இவை எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய அறிதலும் புரிதலும் இன்றைய நம் செம்மறி ஆட்டு மந்தைக் மக்கள் கூட்டத்திற்கு விளங்குவதில்லை என்றுதான் கருத வேண்டியுள்ளது. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முகவர்கள் அலைந்து திரிந்து மக்களை ஆயு

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழர் மரபு. இந்த மரபு இன்று தவறான புரிதலோடு போகி பண்டிகை அன்று பிளாஸ்டிக் குப்பைகளையும் டயர்களையும் எரித்து சுற்றுச் சூழலை நாசம் செய்யும் படித்த முட்டாள்கள் செய்யும் பகுத்தறிவு. இரு பெரும் ஊழல் திராவிட இயக்கங்களின் தலைவன்கள் யார் என்று தெரியாத  தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்கள் எனும் இழி நிலை. சாதிய மதவாதக் கார்பொரேட் கும்பல் வேறு இந்தத் தாண்டல் கார அணிவரிசையில். கேட்கவா வேண்டும்? மக்களைச் செம்மறி ஆடுகள் ஆக்கி மேயும் காண்டாமிருக கூட்டங்கள். ஆளப் போரான் தமிழன் உலகம் எல்லாமே இந்த வரிசையில் முதல்வர் பதவிக்கு வரிசை கட்டி நிற்கும் கூத்தாடிகள் வேறு செம்மறி ஆட்டுப் பண்ணை நடத்தும் அவலம். பொறுப்பாரா தமிழ் அன்னை? என்னை வெள்ளாட்டு வேங்கையாக்கி இந்தச் செம்மறி ஆட்டுக் கூட்டத்தை ஒன்று படுத்து எனக் கட்டளை பிறப்பித்து இதோ இந்த வினாடி கூடத் தூங்க விடாது துரத்துகிகிரார். கடுகு மூட்டை சிதறிப் போனது போல இருக்கு இன்றைய தமிழ்ச் சமூகம். மலைப்பாக இருக்கிறது.  சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டுமாம். வெல்லப் பிறந்தவனுக்கு இமயமும் ஓர் கடுகே. வசந்தத்தின் துவக்கம