ஞான தேசிகன் சித்தர்
ஈரோடு மண்ணுக்கு நான் வந்தபோது எனது மைத்துனரின் சித்த மருத்துவ ஆசானாக அறிமுகம் ஆனவர்தாம் திரு ஞான தேசிகன் அவர்கள். அவரது மருத்துவ வித்தை குறித்தும் அவரிடமுள்ள ஆன்மீக சக்தி பற்றியும் எனது மைத்துனர் வாயிலாக அறியத் துவங்கிய நான் ஒரு நாள் அவரைச் சந்திப்பதற்காக அவரது சித்த மருத்துவமனை அமைந்திருந்த சிவன் மலை அடிவாரத்திற்குச் சென்றேன். என்னை ஒரு மகனைப் போல அன்பு காட்டி வரவேற்ற அவரை இரண்டாவது முறையாக நான் சந்தித்தபோதுதான் என்னை அறியாமலேயே அவரது வழி காட்டுதலுக்கு ஆளாகத் துவங்கினேன். இரண்டாவது முறை என்று நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் நான் முதன் முறையாக அவரைச் சந்தித்ததே கன்னியாகுமரியில்தாம். அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்ததற்கு முதல்நாள் எனது துணைவியின் அத்தை மகன் ராஜ்குமார் திருச்சியில் இருந்து என்னைக் காண்பதற்காக கருவூர் வந்திருந்தார். நான் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது எனது மூத்த மைத்துனர் குடும்பத்துடன் எனது துணைவியும் தவசி அவர்களுடன் கன்னியாகுமரிக்கு ஆன்மீகப் பயணமாகச் சென்று இருப்பதைப் பற்றி நான் எடுத்துரைத்து அதோடு விடாமல் நாம் இருவரும் கன்னியாகுமரிக்குச் செல்வோமா எனக் கேட்க