கல்வெட்டுகள் தரும் தகவல்கள் சரியா?


நம் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள் தரும் தகவல்களை வரலாற்று ஆய்வாளர்கள் தொகுத்து நம் தமிழ் மக்களுக்குத் தந்து வந்துள்ளனர்!

அவற்றிலுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற தவறான முடிவுக்கு நம் தமிழினம் தள்ளப்பட்டு விட்டதே என்ற ஆதங்கம்தான் இந்தக் கட்டுரையின் நோக்கம்!

தமிழகத்தில் சைவ வைணவச் சண்டைகள் நடைபெற்றதென்பது வரலாறு அறிந்த உண்மை! 

இந்த சைவ வைணவச் சண்டைகளில் நம் தமிழ் மன்னர்கள் ஈடுபட்டனர் என்பதை அண்மையில்கூட ஒரு திரைப்படத்தில் எதையோ சொல்ல நினைத்து எங்கோ சென்று தன் கதையை சொதப்பி உள்ளார் ஒரு பிரபல திரைப்பட பகுத்தறிவுக்கு மாறி விட்டதாகக் கூறிக்கொள்ளும் நடிகர்!

பாவம் குழப்பமான எண்ணங்களுக்கு சொந்தக்காரர் அவர்! அதனால்தான் அவருடைய சமீபத்திய படங்கள் பெரும்பாலும் குழறுபடியாகவே அமைந்துவிட்டன!

அந்தத் திரைப்படத்தில் குலோத்துங்கச் சோழனுக்கு மத வெறி ஏற்பட்டதாகவும் அதனால் அவர் ரங்கநாதர் சிலையைக் கடலில் தூக்கி போட்டுவிட்டதாகவும் காட்சியை அமைத்துள்ளார்!

தமிழகக் கோயில்கள் அனைத்தும் பார்ப்பனர்கள் வசம்தான் உள்ளன என்பது உலகறிந்த உண்மை! அதிலும் குறிப்பாக பிரம்மாண்டமான சைவ வைணவக் கோயில்களாக விளங்குபவை அனைத்தும் இன்றுவரை அவர்களின் கட்டுப்பாட்டில்தான்!

எனவே சைவ வைணவச் சண்டைகளுக்கு யார் பிரதானமான காரணமாக இருந்திருப்பார்கள் என்பது ஒரு மழலைக்குகூட எளிதாக விளங்கிவிடும்!

மிக அரிதான வைரங்கள், மரகதங்கள், முத்து, பவழம், இரத்தினம் எனப் பொன்னும் பொருளும் குவிந்து கிடந்த தமிழக மன்னர்களின் அரண்மனைகள் பின்னர் இன்றுள்ள கோயில்களாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவற்றை யார் நிர்வகிப்பது என்ற சொத்து சண்டைகள்தான் சைவ வைணவ யுத்தங்களுக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும்!

இவர்கள்தான் புத்தமும் சமணமும் தமிழகத்தில் வேறூன்றாமல் தடுக்க நம் தமிழ் மக்களைத் திசை திருப்பியவர்கள்! புத்தமும் சமணமும் தமிழகத்தில் தலையெடுத்ததால் இவர்களின் வருமானம் பாதிக்கப்பட, இவர்களின் துர் போதனையால்தான் சமணர்கள் கழுவேற்றப்பட்டிருக்கக்கூடும்.

இவர்களின் மத வெறிச் சண்டைகளைத் தடுத்தாண்ட குலோத்துங்கச் சோழர் போன்றவர்களின் தலையீட்டை விரும்பாத, வைணவக் கோயில்களை கைப்பற்றி நிர்வகித்த பார்ப்பனர்கள்; குலோத்துங்கச் சோழர் சைவ மரபைப் சேர்ந்தவரென்பதால் அவர் மீதுள்ள கோபத்தில்; அவரைப் பற்றி அவதூறாகக் கல்வெட்டுகளில் எழுதி வைத்திருக்க வேண்டும்!

தங்கள் வசமுள்ள ஒரு இடத்தில் யார் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இன்று பெரும்பாலான கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் தொல்காப்பியம் வகுத்த இலக்கணத் தமிழுக்கு உரியதா என உண்மையான தமிழ் ஆர்வலர்கள் ஆய்வு செய்தால் ஏராளமான வரலாற்றுப் பிழைகளைக் களைந்து தமிழினத்தின் உண்மையான வாழ்க்கை முறை எதுவென உலகிற்கு பிரகடனப்படுத்த இயலும்.

இதுதான் இன்றுவரை மறைக்கப்பட்டு உண்மையில் நடந்திருக்கும் சரியான வரலாற்றுச் செய்தி! தமிழகத்தின் இருண்டகாலம் என அழைக்கப்பட்ட பதினோராம் நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் அரண்மனைகள் கோவில்களாக மாற்றம் பெற்று இது போன்ற தவறான கல்வெட்டுகளை உருவாக்கியிருக்க வேண்டும்! தமிழின் அரை வடிவமான எழுத்து வடிவமான சமஸ்கிருதத்தை மட்டுமே அறிந்திருந்த பார்ப்பனர்கள் அரைகுறையான கையெழுத்துப் பிரதியுடன் கல்வெட்டில் வடித்த கதைகளைத் தவறாகப் புரிந்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்ட நாம் தமிழ் மொழியின் எழுத்து வடிவம் வடமொழியிலிருந்து வந்ததென்ற தவறான கருத்துக்கு இது போன்ற கல்வெட்டுகளின் கதைகளால் தள்ளப்பட்டு விட்டோம்!

நம் நாட்டுக்கோட்டையார் இனத்தில் ஒரு பழக்கம் இருப்பதை நான் இன்றுவரை நன்கறிவேன்!

அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குச் சிதம்பரம் எனப் பெயர் இருக்கும்! மற்றொருவருக்கு அண்ணாமலை என்ற பெயரிருக்கும்! இன்னொருவருக்கு பழனியப்பன் என்ற பெயரிருக்கும்! இந்த பெயர்கள் தலைமுறை தலைமுறையாக தாத்தா மகன் பேரன் என மாறி மாறி சுழற்சி முறையில் சூட்டப்படும்!

இது போலத்தான் பல்லவ சேர சோழ பாண்டிய மன்னர்களின் வாரிசுகளுக்கு இடப்படும் பெயர்களும் தலை முறை தலைமுறையாகச் சூட்டப்பட்டு வந்துள்ளன!

இதில் குலோத்துங்கச் சோழன் எத்தனையாவது மன்னன் என்ற கருத்தை கரிகாலன் தொடங்கி சுமார் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு ஆய்வு செய்தால் நமக்குத் தலை சுற்றி விடும்! கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பது குலோத்துங்கச் சோழர்கள் வருகின்றனர்! வரலாற்றில் தவறாகச் சித்தரிக்கப்படுகிற குலோத்துங்கச் சோழன் தமிழினத்தைச் சேர்ந்தவனா அல்லது வடவர்களின் ஆதிக்கத்தில் வீழ்ந்த இருண்ட காலத் தமிழகத்தை ஆண்ட வட மாநில மன்னர் வம்சத்தைச் சார்ந்தவனா என்ற கேள்வியினை ஏன் நாம் எழுப்ப மறுக்கிறோம் என்பதுதான் தமிழின வரலாற்றில் விளக்க இயலாத மர்மம். இன்றுவரை இராமாயணமும் மகாபாரதமும் சொல்லும் கதைகளை அப்படியே ஏன் ஏற்று வருகின்றனர் நம் தமிழர்கள் என்பதும் விளங்காத மர்மமே.

குழப்பமான தகவல்களைத் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கல்வெட்டுகளாகத் தந்துள்ள பார்ப்பன இனத்தை சார்ந்த இது போன்ற நடிகர்கள் இனியாவது தங்களின் தவறை உணர்ந்து தமிழ் உலகம் தழைக்கப் பாடுபட்ட தங்கள் இனம் சார்ந்த மகாகவி பாரதியின் “சாத்திரங்கள் பொய்யடா” என்ற கவிதை வரிகளைத் தினமும் பத்து நிமிடங்கள் செலவிட்டாவது படிக்க வேண்டுமென்பதே எமது தாழ்மையான வேண்டுகோள்!

இன்றுள்ள பிரம்மாண்டமான கோயில்களுக்குச் சொந்தமான ஏராளமான நிலங்கள் எங்கே போயின என்பது கேள்விக் குறி? யார் இவற்றை விற்றனர் என்பதும் விளங்காத மர்மம். இங்கு குவிந்து கிடந்த பொன்னும் மணியும் இரத்தினங்களும் என்ன கதியானது என்பதும் கேள்விக்குறிதான்.

ஒரு காலத்தில் சேரர் வசம் இருந்த பத்மநாபபுர அரண்மனைப் புதையல்கள் ( இன்று அது கோயில்) இன்று வரை மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால்தான் இந்த தேசத்தை அடிமைப்படுத்திய போர்த்துக்கீசிய, பிரெஞ்சு, இசுலாத், இறுதியாக ஆங்கிலேயர்கள் என எவரிடமும் சிக்காமல் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வைத்திருந்ததால்தான் இன்று  அவைகளை விலை மதிப்பிட முடியாமல் இன்றைய வல்லுனர்களே திணறிக் கொண்டுள்ளனர். அதுவே இந்தக் கோயில்களை நிர்வகிப்பவர்கள் கையில் சிக்கியிருந்தால் என்ன கதியாகி இருக்கும் என்பதை அந்தப் பத்மநாபரால்கூட அறிய இயலாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!