இதயத்தை விலையாய் கொடுத்துவிட்டு அன்பினை வாங்கப் பிறந்து விட்டேன்

செல்வம் சேர்த்தல் என்பது என் இலக்காக இருந்தே இல்லை. பணம்  உள்ளவர்களிடம் இருக்கும் அகந்தை குணாதிசயங்கள் என்னிடம் வளர நான் அனுமதித்தது கிடையாது. 

இளம் வயதில் வறுமை நிலையினை அங்குலம் அங்குலமாக அனுபவித்தவன் நான்.

சொந்த ஊரை விட்டு நாடோடியாகிப் பல ஆண்டுகள் கடந்தும் 100 கல் தொலைவில் இருந்தும் உறவுகளைப் பிரிந்த தவிப்பும் அன்பும் அவர்கள் உதாசீனம் காட்டியபோதும் மாறவே இல்லை. 

சிறு கோபம் வந்தாலும் அவர்கள் குணம் அப்படியே இருக்கட்டும்.  நாம் நமக்குள் எழும் கோப எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சமாதானம் ஆவேன்.

ஏராளமாகப் பணம் புரளும் வணிகம் செய்தபோதும் எனக்கெனச் செலவிட்ட தொகை மாதம் நூறு ரூபாய்களை தாண்டியதில்லை.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி என்ற தமிழன்னையின் பாடல் வரிகளுக்கேற்ப இன்று வரை வாழ்ந்து வருபவன்.

நான் எவருக்கும் போட்டியாகவும் ஓடவில்லை. எவர் வாழ்வையும் பொறாமையாகப் பார்த்ததும் இல்லை. எவர் வாழ்வையும் கெடுத்ததும் இல்லை.

வணிகத்தில் பட்ட கடனை அடைக்க என் வாழ் நாள் முடிவதற்குள் என்னை வழி நடத்தும் மகா சக்தி ஆற்றல் தரும் என்ற நம்பிக்கையை நெஞ்சில் சுமப்பவன் நான்.

என்னைத் தோற்கடிக்க என் குடும்பமும் வணிகப் போட்டியாளர்களும் வேலைக்குச் செல்லும் இடங்களிலும் சிலர் காரணிகளாக  இருந்தனர் என்று நான் கருதினேன். 

இந்த நினைப்பும் தவறென்று என்னை வழி நடத்தும் மகாசக்தி தெளிவாக்கியது. 

என்னைப் பக்குவப்படுத்த பொன் போலத் தகதகக்க சுடப்பட்டேன். 
சம்மட்டி கொண்டு அடிக்கப்பட்டேன். தழலும் சம்மட்டியும் ஆன கருவிகள் அவர்கள். 

எய்தது மகாசக்தி. அடிகள் தொடர்கிறது. நான் பக்குவப்பட இந்த அடிகள் இன்னும் தேவை. அடிகள் வலிக்கும் போது அடிப்பவர் மீது கோபம் வருகிறது. 

நேர்மை கொண்ட இதயத்துக்கு இந்தக் கோபமும் அவசியம் வேண்டும் என்று சங்க இலக்கியத்தில் வலியுறுத்தியுள்ளனர் நம் மூதாதையர்கள்.

என் இலக்கு நோக்கிப் பயணிக்க இந்த அடிகள் தொடரத்தான் வேண்டும். 

பிரிந்து சென்ற குடும்ப உறவுகளை இணைக்கப் போராடி வெற்றி கண்டவன் நான்.

எதிரிகளையும் மன்னிக்கும் குணம் வளர்த்தேன். என் எதிரே அவர் வந்தால் அவர் நாணப் புன்னகைப்பேன்.

நேருக்கு நேர் எதிர் கொண்ட எதிரிகளையும் மன்னிக்கும் குணம்.

முதுகில் குத்தியவர்களை என்னை வழி நடத்தும் அற தெய்வம் தண்டிப்பதை தடுக்க எனக்கு வழியில்லை.

அது அவரவர் செய்த வினைக்கேற்ற தண்டனை. சிபாரிசு செய்ய எனக்கு அனுமதியும் இல்லை.

வலிக்கிறது என ஓடுவதை நிறுத்தினால் என் இலக்கை நான் அடையாமல் போக நேரிடும். என் இந்தப் பிறவியும் வீணாகி அடுத்த பிறவியில் தொடர நேரிடும். 

வலிகள் சகிக்கின்றேன்.
இலக்கு வெகு அருகில்.

வெற்றி நிச்சயம் ஆகும்போது

ஏராளமான மகுடங்கள் சாவடிக்கப் படலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!